யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் நேற்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...
தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை நீடித்து மக்களை முடக்கி வைத்துக் கொண்டு நாட்டின் உற்பத்திகளை கையாள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் நாட்டினை முடக்கி வைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணும் என கூறும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்று நோயை மறைத்து ...
சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 21 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேவையின்றி வீதிகளில் சுற்றித் திரிந்தேரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி பகுதியில் ஏ-9 வீதியோடு இணையும்கிளை வீதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு ...
வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. விசேட அதிரடிப் படையினரும் வவுனியா நகர சபையினரும் இணைந்து நேற்றுக் காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தி தொற்றைத் தடுக்கும் ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடர் வலயங்களை தவிர 19 மாவட்டங்களில் இன்று 10 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் செயலகம் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ...
கனடாவில் வசித்து வந்த தமிழ் தம்பதியொன்று கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவர் கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்திருந்தார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்தில் வசித்து, பின்னர் கனடா ரொறன்ரோவில் குடியேறிய புஸ்ப ராணி நாகராஜா (வயது-56) ...
கொழும்புத்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் திர ட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் அயலவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை இப்பாடசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப் பட்டன என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்புப் புலனாய்வுப் ...
மன்னாரில் ஊரடங்கு காலப்பகுதியில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸாருக்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் குளிர்பனங்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக் கான நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மெசி டோ நிறுவன ஊழியர்களால் நேற்று வழங்கப்பட்டன. ...
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன்குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக அக்கராயன் குளம் பொலிசார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்கு கிடைத்த தகவலை யடுத்து சம்பவ ...