1986 ஆம் ஆண்டு பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்திய மாம்பழங்களுக்கு, ஜப்பான் தடை விதித்திருந்தது. பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டதால், ஜப்பானுக்கான மாம்பழ ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது .இந்நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாம்பழங்களை இறக்குமதி ...
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாக ...
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு ஜப்பானிடமிருந்து 400 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் பல உதவிகளை வழங்கி வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு ஜப்பான் ...
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 11 சிவபூமியாகிய எம் ஈழத் திருநாட்டில் சைவ சமயத்திற்கான ஒரு தலைமைப் பீடம் இல்லாமை மிகப் பெரும் குறைபாடாகவே உள்ளது. ஆம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்கு நாடு தழுவிய ரீதியில் அல்லது மாநில அடிப்படையில் இந்து சமயத்திற்கான தலைமைப் பீடங்கள் உள்ளன. அதிலும் ...
செவிலியர் நோக்குநிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 515 இளம் அறிவியல் செவிலியர் பட்டதாரிகளை நேரடிச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வளம், தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் ...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்ததுடன், ...
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாவியில் வீழ்ந்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, திருப்பெருந்துறை, 04 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27) கரையொதுங்கியுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் கடந்த 25 ஆம் திகதி கடற் தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. தீவிரமாக தேடுதல் ...