தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார். குறித்த பிக்குகள் நேற்று (26) ...
பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றித் தரப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் அந்தத் தடைகளை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய ...
புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ...
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த ...
60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகள் ...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்கின் குற்றவாளிகளாக ...
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) நேற்று (24) நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் ...
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நாடளாவிய ரீதியில் படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை ...
உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை செலுத்த வேண்டாம் எனப் பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், மாற்றங்கள் செய்யப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ...
தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி, பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக ...