பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு 5 பேர் மேஜர் ஜெனரல்களாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும், ...
தீக்காயத்துக்குள்ளான வயோதிப மாது ஒருவர் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் குண்டுவர்காடு ஒழுங்கை, மதவடி, வல்வெட்டித் துறையில் 65 வயதுடைய தவராசா இராஜேஸ்வரி என்பவரே உயிரிழந்தவராவார். தீக்காயத்துக்குள்ளான அவரை அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் ...
ஜனாதிபதி கோட்டாவின் நிர்வாகம் ஆபத்தான வெறுப்பைத் தூண்டுவதாக குற்றம் சாட் டியுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக இலங்கை வழங்கிய வாக்குறுதி களை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப காலமாக அதி கரித்துக் ...
பெளத்த சமயத்தால் இலங்கை வளம் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், இராணுவம் மீது சர்வதேச அமைப்புக்கள் எவையும் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என போர் வீரர்கள் விழாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றைய தினம் 11ஆவது ...
அரச படைத்தரப்பால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தெறிந்து உணர் வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. பொது மக்கள் பங்கு பற்றி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியை தெரிவித்தனர். இறுதி யுத்தத்தின்போது உயிர் நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் ...
அம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து (2020 மே 18ஆம் திகதி) அதி காலை 2.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 ...
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இறுதிப் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஏற்றப்பட்ட ஈகைச்சுடரினை இராணுவத்தினர் வீசி எறிந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி ...
முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார். யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ...
வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களேயான 17 வயது இளம் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த ரூபன் கிருஷ்ணசாந்தி (வயது – 17) எனும் இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நெல்லியடிப் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பாக ...
யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலையின் இறுதி நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.