நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். இந்த உலகம் இயங்குவதாயின் அதற்கு அடிப்படை நீர். ஆனால் எங்கள் இலங்கைத் திருநாட்டில் நீரினால் உயிர் போவதை எண்ணுங்கால் இதயம் கருகிப் போகும். ஆம், கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் நீரில் மூழ்கிப் பலர் உயிரிழந்து போயினர். திருகோணமலையில் கடந்த ...
ஆளுக்கொரு அரசியல் கட்சி, ஆளுக்கொரு அமைப்பு, ஆளுக்கொரு கோயில் என்ப தாக நிலைமை மாறிவருகிறது. இது ஒரு புறமிருக்க, சில குழப்பவாதிகளின் உபத்திரவம் தாங்க முடியாதென்றாயிற்று. ஆம், எதற்கெடுத்தாலும் விமர்சனம். எதற் கொடுத்தாலும் எதிர்ப்பு. எதற்கெடுத்தாலும் குதர்க்கம் என்றால், நம் மண்ணில் நல்லது ஏதேனும் நடக்குமா என்ன? ஆம், ...
இந்த நாட்டில் இருந்து இனவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் ஒருபோதும் ஒழித் துக்கட்ட முடியாது என்பது இப்போது நிரூபண மாகியுள்ளது. ஆம், தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தையிட்டி விகாரை, கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று (17) ...
நில வளம் என்பது வாழும் உயிர்களுக் கெல்லாம் முதன்மையானது. ஆம், நீரின்றி அமையாது உலகு எனக் கூறப்பட்டதற்குள் நிலம் அடிப்படை என்றா கிறது. எனினும் நம் தாயகத்தில் பராமரிப்பு எதுவு மில்லாமல் பற்றைக் காணிகளாகக் காணப் படுகின்ற நிலங்கள் ஏராளம். காணி உரிமையாளர்கள் இருந்தும் காணிகளில் பற்றைகள் வளர்ந்து ...
“இனவாதம்” என்பது இலங்கையில் இருக்கும்வரை அமைதியின்மையும் இருந்தேயாகும். இங்கு இனவாதம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழர் குறித்தே பிரயோகித்தனர். அதாவது தமிழர்கள் இனவாதம் பேசுவதைத் தடுப்பதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. ஆம், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சிறு பான்மையினர். எனவே அவர்கள் சிங்கள மக்களுக்கு ...
பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நாடு – மக்கள் முன்னேற்றமடைந்ததான வரலாறு இல்லை. ஆக, பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் அது தொடர்பான தேடல்கள் நம் இளம் சந்ததியிடம் ஏற்பட வேண்டும். உண்மையில் நமது இலங்கை போன்ற நாடுகள் இன்னமும் அபிவிருத்தியடைய முடி யாமல் இருப்பதற்குக் காரணம் பொருத்தமான முதலீடுகள் ...
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் வடக்கு கிழக்கிற்கும் வருகை தர இருப்பது மகிழ்வைத் தருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்ந்த சி.பி.இராதா கிருஷ்ணன் அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் அதீத கருசனை கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இஃது ஒரு புறமிருக்க, இந்தியப் ...
நாடுகளின் முன்னேற்றம்,அந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கம், அவர்களிடம் இருக் கக்கூடிய இரக்க சிந்தனை, மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்பாங்கு என்பன அந்த நாட்டு மக்கள் எந்தளவு தூரம் பொது விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. ஆம், அபிவிருத்தியடைந்த நாடுகளை ஒரு கணம் நோக்கினால், அந்த நாட்டு மக்கள் பொதுவிதிகளைப் ...
உள்ளூராட்சி சபைகளான பிரதேச, நகர, மாநகர சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அன்புவணக்கம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றி என்பது அந்தந்த இடங்களில் உங்களுக்கு இருக்கக்கூடியமக்கள் செல்வாக்கு எத்தகையதென்பதைச் சுட்டி நிற்பதா கும். தவிர, நீங்கள் மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுடன் சமூக சேவையில் ஈடுபட்டதன் ...
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அறிவிப்புகளால் மக்கள் சமூகம் அதிர்ந்து போயிற்று. ஈரானை ஓர் இரவில் அழிக்கப் போகின்றேன். ஒரு நாகரிகம் அழியப் போகிறது என்ப தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகள் மனிதநேயமுள்ள எவரையும் ஏக்கமடைய வைத்திருக்கும் என்பதில் இரு வேறு ...