கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்போது நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் ...
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று முனத்தினம் (18) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் ...
2009 ஆம் ஆண்டு மே – 18 தமிழின அழிப்பு உச்சம் தொட்டநாள். ஆம், வன்னிபெருநிலப்பரப்பில் எங்கள் உறவுகள் சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்களால் மிக மோசமாகக் கொல்லப்பட்டனர். அந்த இனஅழிப்பு அவலம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அன்று உயிரிழந்தவர்களுக்கு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி ...
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 2,000 பேர் குருதிப் புற்றுநோயினால் (Blood Cancer/Leukaemia) பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எலும்பு மஜ்ஜை மாற்று ...
17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், நாட்டில் அமைதியை ...
நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட சொந்த உலக சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார். ’14 பீக்ஸ் எக்ஸ்பெடிஷன்’ நிறுவனத்தின் ஊடாக வருகை தந்த மலையேற்றக் குழுவினருக்கு வழிகாட்டியாகச் ...
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (18) பிற்பகல் லண்டன் பயணமாகியுள்ளார் . இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . இதற்கான பிரதிநிதிகளாக மேலும் இருவர் இணைந்து கொண்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான ...
14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இரண்டு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (18) காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க ...
டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் ...