அன்புக்குரிய அரச சேவையாளர்கள் அனைவருக்கும் மகிழ்வான வணக்கம். இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகிறது. அரச பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, அவர் கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூல வாக்களிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவில் தபால் மூல வாக்களிப்பு என்பது புதுமனைப் புகுவிழாவின் போது ...
துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு பகுதியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் துன்னாலை தெற்கைச் சேர்ந்தவர்களான தங்கவேல் தங்கேஸ்வரன் (வயது – ...
நாட்டில் நேற்றைய தினம் 104 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கந்தக்காடு போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர் பினைப் பேணிய 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜாங்கனையில் கொரோனா ...
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி (17)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் ...
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம், 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. ...
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் கொவிட் – 19க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா ...
வவுனியா, சேமமடு பகுதியில் மாட்டுச் சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் பல மாதங்களாக குவிக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தினை பாரவூர்த்தி ஒன்றில் சிலர் ஏற்றியுள்ளனர். ...
ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்காக நடத்தப்படுவதே பொதுத் தேர்தலாகும். தேர்தல் வகைமைகள் வித்தியாசப்பட்டாலும் பொதுத் தேர்தல் என்பதே பாராளுமன்ற ஆட்சிக்கான வித்திடல். அந்த வகையில் இலங்கையின் பாராளுமன்ற அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. கெடு காலம்போல, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட கையோடு கொரோனாத் தொற்று உலகை ...
வடக்கில் இவ்வருடம் 2,327 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் போதைப் பொருள் கடத்தல் வடக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு கடற்படை கட்டளை தலைமையகம், வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத் தின் விலை உச்சபட்ச அளவை எட்டியது. 24 கரட் தங்கத்தின் விலை முதன்முறையாக 100,000 ரூபாயை எட்டியது. கொரோனா தொற்று காரணமாக தங்க வரத்து நின்று போனதால் நாட்டில் தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலை உயர்ந்து செல்வதாக தேசிய இரத்தினக்கல் ஆபரண ...