Type to search

Headlines

யாழ்.மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா

Share

யாழ்.மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இதன்படி யாழ். மாவட்டத்தில் 18 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன்படி யாழ். மாவட்டத்தில் சிறைச்சாலையில் 9 பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், தெல்லிப்பழையில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தெல்லிப்பழையில் தொற்றுக்குள்ளான 5 பேரில் 3 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும், மேலும் ஒருவர் சுன்னாகம் மின்சார சபை சுற்றாடலில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.


மேலும் மன்னார் மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link