நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஜூலை 7 இல் விசாரணைக்கு
Share
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, வரும் ஜூலை 7 ஆம் திகதி (2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (மே 29) தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை துரோகம் இழைத்ததாகக் குற்றம் சாட்டியே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


