Type to search

Headlines News World News

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் அடையாளம்!

Share

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், 21 வயதுடைய நசீர் பெஸ்ட்  என பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நபர், இதற்கு முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது பாதுகாப்புத் தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார்.

நசீர் பெஸ்ட் என்ற இந்த சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயற்சித்தபோது, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மனநல மருத்துவச் சிகிச்சைகளுக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link