Type to search

Headlines Local News News

ஏறாவூரில் நிலத்தைத் தோண்டியபோது ஆயுதங்கள் மீட்பு!

Share

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர், ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக, நேற்று (20) அத்திவாரம் தோண்டும்போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த காணியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிலத்தைத் தோண்டியபோது, ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்த காணி உரிமையாளர், இது குறித்துப் பொலிஸாருக்கு அறிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆயுதங்களை மீட்டனர். 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link