Type to search

Headlines Local News News

இலங்கையில் ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புற்றுநோயாளிகள் அடையாளம்!

Share

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 2,000 பேர் குருதிப் புற்றுநோயினால் (Blood Cancer/Leukaemia) பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை (Bone Marrow Transplant) செய்துகொண்டு குணமடைந்தவர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளர்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கும் முறைகள் மற்றும் அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த மரணங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link