840,000 கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
Share
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 840,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன், அந்த எண்ணிக்கை 176,465 ஆகும்.
அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 99,777 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவருகிறது.


