Type to search

Headlines Local News News

1600க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

Share

கொழும்பு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளின் போது, பெருமளவிலான சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடிகமுவ பகுதியில், சுமார் 1125 லீற்றர் (1500 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மொரகஹஹேன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெஹெல்பத்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில், 97.5 லீற்றர் (130 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 65 வயதுடையவர்கள் என்பதுடன் கோனபொல சந்தி மற்றும் கெஹெல்பத்தர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன மற்றும் கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link