20 ரூபாவால் அதிகரிக்கும் ரைஸ், கொத்து
Share
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ப்ரைட் ரைஸ் கொத்து உள்ளிட்ட உடனடி உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. 20 ரூபாவினால் உணவுகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேங்காய் எண்ணெயின் விலை குறைவடைந்ததையிட்டு சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


