Type to search

Headlines

பேரவையின் இணைத் தலைமை யிலிருந்து விலகினார் நீதியரசர் விக்னேஸ்வரன்

Share

அரசியல் சாராத மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காக பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து நீதியரசர் விக்னேஸ்வரன் விலகினார்.

தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற் கான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இணைத் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் முக் கியஸ்தர்களுடன் இது தொடர்பாக தான் நேற்று காலையில் பேசியதாகவும், தமிழ் மக்கள் பேரவையை கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காக இவ்வாறு தான் இணைத் தலைமைப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link