Type to search

Headlines

கட்டப்பிராயில் விபத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

Share

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில்; குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் கல்வியங்காடு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுபேசன் பவானி (வயது-33) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

கட்டைப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற் பட்டபோது பிரதான வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link