Type to search

Local News

தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிச் சென்றவர் மன்னாரில் கைது

Share

வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மீண்டும் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link