Type to search

World News

கொரோனாவால் ஒரேநாளில் 5,423 பேர் பலி!

Share

கொரோனா வைரஸ_க்கு உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை இதுவரை உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகினர்.

கடந்த 7 ஆம் திகதி அதிக பட் சமாக 7,300 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை குறைந்திருக்கிறது .

கடந்த 12ஆம் திகதி அமெரிக்காவில்தான் அதிகமானோர் உயிரிழந்தனர். அங்கு 1,535 பேர் பலியானர்.

இதே போன்று இங்கிலாந்தில் 717 பேரும், பிரான்ஸில் 574 பேரும், இத்தாலியில் 566 பேரும், ஸ்பெயினில் 547 பேரும், பெல்ஜியத்தில் 303 பேரும் இறந்தனர்.

அதே போன்று நேற்று முன்தினம் மேலும் 71 ஆயிரம் பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19 இலட்சத்து 26 ஆயிரமாக உயர்ந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link