Type to search

Local News

பருத்தித்துறையில் உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை

Share

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனோ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்ததாக தெரி விக்கப்பட்டதை அடுத்து திடீரென ஏற்பட்ட மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருடைய உடற்கூற்று மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இப் பரிசோதனை அறிக்கையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

அவர் அண்மையில் கம்போடியா நாட்டுக்கு சென்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link