Type to search

Local News

குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Share

(கிளிநொச்சி)
நாவல்பழம் பிடுங்கி உண்ட பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
இந்த துயர சம்பவம் புதுக்குடி யிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு குளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கிளிநொச்சி உருத் திரபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பானுசன் என்ற 11 அகவையுடைய சிறு வனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
பாடசாலை விடுமுறை காரணமாக வள்ளிபுனத்தில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு சென்ற சிறுவன் ஏனைய சிறுவர் களுடன் சேர்ந்து நாவல்பழம் பிடுங்குவதற் காக சென்றுள்ளான்.
நாவல்பழம் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு இடைக்கட்டு குளத்தில் குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி தத்தளித்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனு டன் சென்ற ஏனைய சிறுவர்கள் அயலவர் களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுவன் மூங்கிலாறு ஆதார மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதுடன் சசிறுவனின் உடலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலி ஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link