Type to search

Headlines

பேராபத்தைத் தொட்டுள்ள இலங்கை நேற்று மட்டும் 2672பேருக்கு கொரோனா

Share

நாட்டில் கோவிட் – 19 நோய்த் தொற்றால் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.


இதனால் மருத்துவமனைகளில் தொற்றாளர்களை பராமரிக்க இடவசதி இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


நாட்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 906 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு தொற்று எண்ணிக்கை உயரும்போது உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link