Type to search

Headlines

4 மாதக் குழந்தை கொரோனாவிலிருந்து குணமடைந்தது

Share

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மிகவும் வயது குறைந்ததாக அடையாளம் காணப்பட்ட 4 மாத கைக்குழந்தை குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர்.

குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவரும் வீடு திரும்பினர்.

புத்தளம், நாத்தாண்டியாவைச் சேர்ந்த 4 மாதக் கைக்குழந்தை உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து கடந்த மார்ச் 30ஆம் திகதி அங்கொட தேசிய தொற்று நோயியல் வைத்திய சாலையில் (ஐ.டி.எச்) சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 4 மாதக் கைக்குழந்தை உட்பட நால்வர் முழுமையாகக் குணமடைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link