Type to search

Headlines

புதுவருட வழிபாட்டுக்காக ஆலயத்தில் ஒன்றுகூடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Share

திருகோணமலையில் புது வருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்று கூடிய வர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும் திரு கோணமலை பத்திரகாளி அம்மன் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு ஒன்றுகூடிய 11 பேர் தலைமையகப் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் ஒன்றுகூடிய கோயில்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link