Type to search

Headlines

கொரோனாவால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை

Share

இலங்கையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவான 5ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் வேறு எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாதவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டிலிருந்து திரும்பிய ஹோமாகமவைச் சேர்ந்த 44 வயதுடையவரே நேற்று அதிகாலை வெலிக்கந்தை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இத்தாலியிலிருந்து மார்ச் மாத முற்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த அவர், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார்.

கடந்த 23ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக வெலிகந்தை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை கவலைக் கிடமான நிலைக்குச் சென்ற நிலையில் நேற்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுத் தவிர்ந்த வேறு எந்தவொரு நோய் தாக்கமும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link