Type to search

Headlines

கே.கே.எஸ் கடலில் குளித்த இளைஞன் நீரில் மூழ்கிப் பலி

Share

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒரு வரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றையவர் தொடர் பில் தகவல் கிடைக்க வில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது-19), மாசிலாமணி தவச் செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர் நேற்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link