Type to search

Headlines

குடியிருப்பு திட்டம் நேற்று யாழ்.நாவற்குழியில் ஆரம்பம்

Share

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “சியபத்த” உங்களுக்கு ஒரு வீடு உங்கள் நகரத்தில் என்ற கருப்பொருளில் யாழ்.நாவற்குழியில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பு திட்டம் அமைப்ப தற்கான ஆரம்ப நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளான நேற்று நவம்பர் 18ஆம் திகதி இந்த வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடு முழு வதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட் டச் செயலாளர் க.மகேசன், தேசிய வீட மைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், சாவகச்சேரி பிரதேச செய லாளர் திருமதி எஸ்.உசா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், உள்ராட்சி மன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், அரசி யல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link