Type to search

Headlines

கிளி.முகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம்

Share

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் பெருமளவு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன.

அவற்றுடன் துப்பாக்கிகளும் காணப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப் பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவன ஊழியர்களால் பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எச்சங்கள் பெண்களினுடையதாக இருக்கலாம் எனவும், அவை விடுதலைப்புலி களினுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

அடையாளம் காணப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதி எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பளைப் பொலிஸார் குறித்த விடயத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

இதனடிப்படையில் நேற்று பிற்பகல் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதவான் அவற்றை பார்வையிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கு மாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link