Type to search

Headlines

கிளிநொச்சிக்கு வந்த இருவருக்கு தொற்று

Share

கொழும்பிலிருந்து கிளிநொச் சிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை 266 பேருக் கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பத்துப்பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரி வித்தார்.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த விமானப் படையை சேர்ந்த 8 பேருக்கும், கிளிநொச்சியில் இருவருக்கும் தொற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திருவையாறு பகுதியில் மரணமடைந்த ஒருவரின் இறுதிக் கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருப் பகுதியிலிருந்து வருகை தந்த குறித்த நபரின் மகள் தனிமைப்படுத் தப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் கண்டாவளைப் பகுதியில் வீதி அமைப்பு வேலைகளுக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலிலுள்ள ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link