Type to search

Headlines

ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தலாம்

Share

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நடைமுறை இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித் துள்ளது.

ஏப்ரல் 20ஆம் திகதி க்குப் பின்னர் இரண்டு வாரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு நடை முறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு முன் மக்கள் கூட்டம் குறித்து குறிப்பிட்ட கவனம் செலுத்தி வழி காட்டுதல்களை வெளியிடுமாறும் அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

கோவிட் – 19 நோய்த் தொற்று இல்லாத மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் தளத்துவதற்கான உத்திகளை அரசு கருதுவதால், பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்து இலங்கை வணிக மன்றம் அரசிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை போக்கு வரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளில் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு வழங்கிய வழிமுறைகளை கண்டிப்பாக செயற் படுத்துதல்

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை அளவிடவும், எந்தவொரு நபருக்கும் காய்ச்சல், இருமல் அல்லது சளி இருந்தால், உடனடியாக சுகாதாரத் துறையின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குதல்.

ரயில்வே கட்டளைச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தல். அதன்படி, ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ துப்புவது, ரயில் நிலையத்திலோ அல்லது முற்றத்திலோ வர்த்தகம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டு, அத்தகைய சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலின்படி, கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மீது ஒரு மீற்றர் இடைவெளி போன்ற சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்க.

ஒவ்வொரு ரயில் நிலையம், படுக்கை அறை மற்றும் பேருந்து ஆகியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கிருமி நீக்கம் செய்ய தேவையான கிருமி நாசினியை வழங்கவும்.

அத்தியாவசிய சேவைகள் இல்லாத தொடருந்துகளிலோ பேருந்துகளிலோ யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

சிலர் பயணிக்க ஆசைப்படக்கூடும், அத்தகையவர்களுக்கு போக்குவரத்து வழங்குவதில்லை.

இம் மாதம் 20ஆம் திகதி நியமிக்கப்படவுள்ள குழு, இந்த விவகாரத்தை அமைச்சருடன் வரும் 22ஆம் புதன்கிழமை விவாதித்து அது குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, கோவிட் – 19 தொற்று நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசின் உதவியுடன் பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்
.
இதனால் பயணிகள் எந்தவித துன்புறுத்தலும் இல்லாமல் பயணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link