Type to search

Headlines

உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் உயிரிழப்பு

Share

முல்லைத்தீவு முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று தடம் புரண்டதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்றுக் காலை இந்த விபத்து சம்பவம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

வயல் விதைப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் உழவு இயந்திரத்தை தயார் செய்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த விவசாயி பயணம் செய்த உழவு இயந்திரம் திருப்ப முற்பட்ட வேளை கட்டுப் பாட்டையிழந்து தடம்புரண்டு விபத்துக் குள்ளாகியுள்ளது .

இதன்போது உழவு இயந்திரத்துக்குள் மாட்டி விவசாயி பலியாகியுள்ளார்.

பலியானவர் முள்ளிவாய்க்கால் கிழக்கை சேர்ந்த கிருபா (வயது – 24) என்பவராவார்.
விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link