Type to search

Headlines

இறுதிச் சடங்கு பற்றி தீர்மானிக்க வேண்டும்

Share

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கு போன்ற ஒரு முக்கியமான விட யத்தில், நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர் மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களை தகனம் செய்யலாமா? அல்லது அடக்கம் செய்யலாமா? என்பதை தீர்மானிப்பது மக்களின் உரிமை என் றும், இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் னர் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் அரசாங்கம் ஆலோசித் திருக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் கூறினார்.

ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதில் உரை யாற்றிய முன்னாள் பிரதமர் விக்கிரம சிங்க, ஐ.தே.க எப்போதும் மத சமூ கங்களிடையே ஒற்றுமையை வளர்த்து வருவதாகவும், எனவே பாதிக்கப்பட்ட சமூகங் களுடன் கலந்துரையாடுமாறு அர சாங்கத்தை வலி யுறுத்துவதாகவும் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link