பொலநறுவை, லங்காபுர பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று மேலுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். லங்காபுர பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரரின் ஐந்து வயதுடைய மகளே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் சிவில் பாது காப்புப் ...
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடை பெறாது. கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் ஓகஸ்ட் 5ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக ...
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6ஆம் திகதி 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக் காளர்களின் வாக்களிக்கும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 வீதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் ...
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். இன்று ...
உங்களது உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தேர் தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் விடப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை கறுப்புச் சீருடை அணிந்த படையினர் பயமுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது தேர்தல் பிரசாரத்தை குழப்பும் ...
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் ...
ஆலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை, சிதம்பரா வடக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேந்த வரதமுத்து சாமிநாதன் (வயது-58) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ...
பொலிஸை கண்டதும் தலை தெறிக்க ஓடிய இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரணியில் நேற்று முன்தினம் பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்தனர். இதன் போது வீதியில் பொலிஸாரின் வாகனம் வருவதைக் கண்டு, அதிவேகமாக ...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்க பெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே ...