பாராளுமன்றத்தின் நேற்றைய கன்னி அமர்வில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டி ருந்தபோது, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். சமூக ஊடகங்களில் இந்தப் படங்கள் பகிரப்பட்டு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட கல் மடுநகர் றங்கன்குடியிருப்பு பகுதியில் தொடரும் காட்டு யானை தொல்லையால் அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர். கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன் குடியிருப்பு பகுதியில் தற்போது சுமார் 110 குடும்பங்;கள் உள்ளன. அவர்கள் ...
வவுனியா நகரசபை வளாக த்தில் நேற்று முன்தினம் நகர சபையினரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டிகளை நகர சபையினர் வழிமறித்து துவிச்சரவண்டிகளுக்கான உரிமத்தினை 15ரூபாய் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். உரிமைப்பத்திரத்தில் துவிச் ...
தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சி.சிவமகா ராசாவின் பதினான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி என்னும் கிராமத்தில் வயல் விதைப்பு செய்வதற்காக காணி துப்புரவு பணியில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரால் சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட் டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடி பொருட்களை ...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கிட்டத் தட்ட56 இலட்சத்து 56 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அத்தோடு மேலும் 1 இல ட்சத்து 75 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனத் தொற்றி னால் உயிரிழந்துவிட்டனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று முன்தினம் செவ் ...
சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழைமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ...
இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில ...
9ஆவது பாராளுமன்றத் தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை யில் இன்று ஆரம்பமாகும். புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார். அரசியலமைப்பின் பிரிவு 33 (2) இல் உள்ள விதிகளின்படி அரசின் கொள்கை அறிவிப்பை ...
கிளிநொச்சி முறிப்புப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர். குறித்த பகுதியில் ...