சாவகச்சேரி கைதடிப் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த வர்கள் உறக்கத்திலிருந்தபோது ஓடு பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மேற் படி திருட்டை நிகழ்த்தியுள்ளனர். இது ...
இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் ...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: பத்திரிகைச் செய்திகளின்படி அரசியலமைப்பின் 20 வது திருத்தம், அதற்கு ...
இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் ஏற்றியபடி இந்தியாவிற்கு சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் இரு நாட்களுக்கு முன்னர் தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. இதில் ஒரு கப்பல் பணியாளர் பலியான ...
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தருமபுரம் பகுதியில் 10 லீற்றர் கசிப்பினை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புளியம்பொக்கணைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 520 லீற்றர் கோடாவும் ஒர் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது ...
இலங்கையில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட் டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3111 ஆக அதி கரித்துள்ளது. இதேவேளை, நேற்றையதினம் மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரு ம்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2889 ...
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளு டன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது வீட்டில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு ...
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்று முன்தினம் முதல் அதிரடி மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட இட மாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவரது இடத்திற்கு தற்போதைய உள்ராட்சி அமைச்சின் செயலாளரான திருமதி ...