Type to search

Headlines Local News News

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வியட்நாம் ஜனாதிபதி

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்நாம் ஜனாதிபதி நாளை வியாழக்கிழமை இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். 

இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி, பல துறைகளை உள்ளடக்கியதாக குறித்த அரச விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வியட்நாம் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார  அமைச்சு மற்றும் வியட்நாம் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் கலாச்சார ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார  அமைச்சு மற்றும் வியட்னாம் இனத்துவ மற்றும் சமய விவகார அமைச்சுக்கும் இடையில் சமய அபிவிருத்தி, சமய மாணவர் நலனோம்புகை, சமய நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு மற்றும் வியட்னாம் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கும் இடையில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப துறைகளில் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் பொது பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வு  ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link