Type to search

Headlines

20ஆவது திருத்தம் சர்வாதிகாரத் தை நிலைநிறுத்தவே பொன்சேகா எச்சரிக்கை

Share

தமது அதிகாரத்தைப் பாதுகாக்கவே ராஜபக்ஷவினர் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றனர் என்பது அவர்களுக்கு தெரியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோ தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் இவர்கள் வாக்களிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ராஜபக்சவினருக்கு சர்வாதிகார வெறிப்பிடித்தால், அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாது.

ராஜபக்சவினரின் சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தவே 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றனர்.

இந்த திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள் எதுவுமில்லை. இதன் மூலம் நாட்டுக்கு மிகவும் மோசமான நிலைமையே ஏற்படும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link