Type to search

Headlines

பொறியாகப் பாவிப்பதற்கு திரைமறைவில் முயற்சித்தனர்

Share

டெனீஸ்வரன் விவகாரத்தை வேறு சிலர் எனக்கு எதிரான பொறியாகப் பாவிப்பதற்கு திரைமறைவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

உதாரணத்துக்கு ஒரு கட்சிக்காரர் எந்தக் காலத்திலும் மன்றுக்கு வராது இருக்க அவரின் சட்டத்தரணி மட்டும் முழு மூச்சில் நடவடிக்கைகளில் பங்குபற்றினர் எனத்தெரிவித்துள்ளார்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்.
நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கேள்வி பதில் அறிக்கையில் இது தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,

கேள்வி: நடைபெற்று முடிந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் திருப்தி அளித்ததா

அத்துடன் இந்த வழக்கு பற்றி உங்கள் கருத்தென்ன? நீங் கள் பிழை செய்தீர்களா?
பதில்: நான் மாகாண சபையில் எடுத்த நடவடிக்கையானது எனது தனிப் பட்ட விருப்பு வெறுப்பின் பால் எடுக்கப்பட்ட நடவடிக்கையன்று.

அமைச்சரவையின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த அமைச்சர்கள் பதவி விலகி தம்மீதான விசாரணையை எதிர் கொண்டு அதனூடாகத் தம்மை நிரபராதிகள் என்று நிரூபிப்பதன் மூலமாக மாகாண சபை நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவே விரும் பியிருந்தேன். அதில் டெனீஸ்வரன் அவர்கள் தாம் குற்றமற்றவர் என்ற வகையில் தான் பதவி விலக முடியாது என்று மறுத்தார்.

ஆனால் அவர் குற்றமுடையவர் என்ற கணிப்பில் நான் அவரை விலகச் சொல்ல வில்லை. அவர் மீது குற்றம் சாட்டிய ஒரு வர் புதிய அமைச்சர் அவையில் இருந்த காரணத்தினால் குற்றஞ் சாட்டியவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருமித்து அமைச்சர் அவையில் இடம் பெறுவது உசிதமில்லை என்று நினைத்தே அவரைப் பதவி துறக்கச் சொன்னேன். குற்றம் சாட்டியவர் விசாரணைத் தினத்தில் ஜெனிவா செல்ல வேண்டியிருந்ததால் அவரால் சாட்சியம் அளிக்க முடியவில்லை.

கால நீடிப்பு வழங்க ஆணைக்குழு உறுப் பினர்கள் சம்மதிக்கவில்லை. ஆகவே இரு அமைச்சர்கள் மீதான விசாரணை நடை பெறவில்லை.

டெனீஸ்வரன் தவிர்ந்த. மற்றைய அமைச்சர்கள் எனது கோரிக்கைக்கு உடன்பட்டு தமது பதவிகளைத் துறந்தார் கள். மேற்கண்ட காரணங்கள் நிமிர்த்தம் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கடப்பாட்டில் நான் அவரைப் பதவி விலக்கியிருந்தேன்.

அவர் அதற்கு எதிராக நீதிமன்றை நாடியிருந்தார். டெனீஸ்வரனைப் பொறுத்தவரையில் இது அவருக்கு ஒரு மானப்பிரச்சினையாக இருந்தது என்ப தைப் புரிந்துகொள்கின்றேன்.
ஆனால், இந்த விவகாரத்தை வேறு சிலர் எனக்கு எதிரான பொறியாகப் பாவிப் பதற்கு திரைமறைவில் பல நடவடிக்கை களை மேற்கொண்டிருந்தனர்.

உதாரணத்திற்கு ஒரு கட்சிக்காரர் எந்தக் காலத்திலும் மன்றுக்கு வராது இருக்க அவரின் சட்டத்தரணி மட்டும் முழு மூச்சில் நடவடிக்கைகளில் பங்கு பற்றி னார். தோகை விரித்தாடும் மயில் போல் அங்கும் இங்கும் திரிந்து தமது முக்கியத் துவத்தை வெளிக்காட்டினார்.

கட்சிக்காரருக்கு மன்றில் என்ன நடந்த தென்று தெரிந்திருந்ததோ எனக்குத்; தெரியாது. எனக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்துமாறு சிலர் டெனீஸ் வர னுக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந் திருக்கலாம் என்று உணர்கின்றேன்.

ஆனால், எத்தகைய அழுத்தங்களுக் கும் அடிபணியாமல் இறுதி நிமிடத்தில் டெனீஸ்வரன் அவர்கள் சுதாகரித்து நல்ல தொரு முடிவை எடுத்திருக்கின்றார். இன உணர்வு சார்ந்த அவரின் இந்த செயலை நான் பாராட்டுகின்றேன்.

அவரின் செயல் சுயநல சிந்தனையுட னும் மற்றும் இன ரீதியாகச் சிந்தித்த சிலரினதும் வாயில் மண் அள்ளிப் போடச் செய்துள்ளது.

இந்த வழக்கு ஆரஉh யனழ யடிழரவ ழெவாiபெ என்ற வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நினைவூட்டுகின்றது. அதா வது சிறு விடயத்திற்கு ஊரைக் கூட்டுவ தாக இந்த வழக்கு அமைந்திருந்தது.

டெனீஸ்வரன் அவர்களைப் பதவி நீக்கம் செய்த விடயத்தை வர்த்தமானி யில் ஆளுநரோ அவரின் செயலாளரோ பிரசுரிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வழக்கே பதிந்திருக்க முடியாது.

டெனீஸ்வரனின் வெற்றிடத்திற்குப் பதில்-அமைச்சர்களை நியமித்து வர்த்த மானியில் பிரசுரித்த ஆளுநர் டெனீஸ் வரனின் பதவி நீக் கத்தை வர்த்த மானியில் பிரசுரிக் காது இருந் தமை வியப்பை ஊட்டுகின்றது. ஆளு நருக்கு இரு ந்த அவரது அதி காரத்தை நான் ஏற்றே உத்தியோக பூர்வ அறிவித்தல் டெனீஸ்வரனுக்கு விரைவில் கிடைக் கும் என்று டெனீஸ் வரனுக்கு அறி வித்தல் செய்திருந் தேன்.

உத்தியோக பூர்வ அறிவித்தல் என்பது வர்த்த மானிப் பிரசுரிப் பையே. ஏன் அவ் வாறு பிரசுரிக்க வில்லை என்று ஆளுநரிடம் கேட் கப்பட்டிருந்தால் அல்லது பிரசுரிக்கு மாறு கேட்கப்பட்டி ருந்தால் இவ் வளவு அமர்க் களங்கள் ஏற்பட் டிருக்காது. நான் ஏற்கெனவே ஆளு நரின் அதிகா ரத்தை ஏற்றுக் கொண்டிருந்தேன்.

அதனால்தான் உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும் என்று குறிப்பிட் டிருந் தேன். அப்படி யிருந்தும் ஆளுநரி டம் எதுவும் கேட் கப்பட வில்லை. அவரும் நீதிமன் றம் வந்ததில்லை.

அதனால்தான் இதனை ஒரு துன்பி யல் நிகழ்வென்றேன். நான் எந்தப் பிழை யும் செய்யவில்லை. ஆளுநரின் பிழை என்னை அவதிக்குள்ளாக்கி விட் டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link