50 ஆயிரத்து 177 பட்டதாரிகள் அரச சேவையில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டனர்
Share

50 ஆயிரத்து 177 பட்டதாரி கள் நேற்று அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட னர்.
அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலை மையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நியமனங்களை வழங்குவதற்காக 25 நிமிடங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுபீட்சமான எதிர் காலத்தை உருவாக்கும் கொள்கைக்கு ஏற்ப, 60 ஆயிரம் பட்டதாரி களுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத் துள்ளது.
அதற்காக நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 38,760 பெண்களும் அடங்கு கின்றனர்.
தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி பயிற்சியின் பின்னர் இவர்கள் பல்வேறு துறை களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.