வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
Share

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கியுள்ளார்.
நேற்றுக் காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தார்.
தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத் தப்பட்டு. சடலம் மீட்கப்பட்டதுடன், உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் மெனிக்பாம் பகுதி யைச் சேர்ந்த சு.நாகேந்திரன் வயது34 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.