Type to search

Headlines

பாம்புக்கடிக்கு இலக்கான 7 வயது சிறுவன் மரணம்

Share

வட்டுக்கோட்டைப் பகுதியில் பாம்பு தீண்டிய சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளான்.

இதில் வட்டுக் கோட்டை தெற்கைச் சேர்ந்த செல்வன் ஜெசிந்தன் (வயது – 7) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுவன் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இயற்கைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது பாம்பு கடித்துள்ளது.

உடனடியாக தாயிடம் வந்த சிறுவன் பாம்பு கடித்ததாக கூறியுள்ளார். அப்போது தாயார் பூச்சி கடித்துள்ளது என ஆசுவாசப் படுத்தியுள்ளார்.

தொடர்ந்து சிறுவனின் வளர்ப்புத் தந்தையார் காலில் விபூதி பூசி வலியை எடுப்பதாக கூறி விபூதியை தடவியுள்ளார். சிறுவன் மீண்டும் மீண்டும் அழுதபடி தன்னை பாம்பு தீண்டிவிட்டதாக கூறியுள்ளான்.

பின்னர் 8.45 மணியளவில் சிறுவனால் பேச முடியாமல் போன போது, யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link