Type to search

Headlines

பகிரங்கமாக சொல்ல முடியாத விதமாக மோசமான பாலியல் இம்சை இடம்பெற்றுள்ளது

Share

பகிரங்கமாக பொதுவெளியில் கூறமுடியாதளவு மோசமான பாலியல் இம்சைகள் இடம்பெற்றுள்ளது எனவும் அதனுடன் தொடர்புடைய 4 மாணவர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட் டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறிசற் குணராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ் வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ராகிங்கும் ஒன்லைனிற்கு சென்றுள்ளது. பலாலி இராணுவ முகாமில் லெப்டினட் தர அதிகாரியாக உள்ள உளவியல் பெண் வைத்தியர் ஒருவரின் சகோதரனும் ராகிங் செய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து விட யத்தை தெரிவித்தார்.

சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள்.

பொது இடத்தில் சொல்ல முடியாதது. சட்டையை கழற்றி உடம்பை காட்டுவது மாத்திரமல்ல. அதற்கு மேலாகவும் கேட்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link