Type to search

Headlines

தியாகி திலீபன் நினைவாக வவுனியாவிலிருந்து நடை பயணம்

Share

தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடைபயணத் தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக விருந்து நல்லூர் வரையிலும் நடை பயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நடை பயணத்தினை நிறுத்துமாறு அதன் ஏற்பாட்டாளர்களிற்கு பொலி ஸாரால் தெரிவிக் கப்பட்டதுடன், அதற்கான தடை உத்தரவினை கோரி வவுனியா பொலிஸாரால் நீதி மன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக குறித்த நடை பயணத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் இவ் நடைபயணம் இடம்பெறவில்லை இது தொடர்பாக மன்றில் அறிக்கை செய்வதற்காக நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகர சபை உறுப்பினர் பி.ஜானுயன் மற்றும் பாராளுமன்ற உறுப் பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம் பலம், செ.கஜேந்திரன் ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி காலை நீதிமன் றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டளை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link