Type to search

Headlines

கஞ்சா, மஞ்சள் கடத்திய இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

Share

மன்னார், உயிலங்குளம், புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் நேற்று செவ்வாய்க் கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள், 17 இலட்சம் ரூபாய் பணம், லொறி மற்றும் டிரக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link