Type to search

Headlines

எச்சரிக்கையின் பின் சிவாஜிலிங்கம் விடுதலை

Share

தியாகி திலீபனின் நினைவு தினம் அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் யாழ்.நீதிமன்றினால் கடும் எச்சரிக்கையின் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள சிறீசபாரத்தினத்தின் நினைவிடத்தில் வைத்து நேற்றுமுன்தினம் கோப் பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டசிவாஜி லிங்கம் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி 2 இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை செய்துள்ளார்.

சிவாஜிலிங்கத்திற்கு சார்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, வி.மணிவண் ணன், க.சுகாஷ், திருக்குமரன் உள்ளிட்ட எட்டு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link