Type to search

Headlines

உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடை

Share

புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இராணுவத்தினரின் விமானப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 24 உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து நிகழ்வுகளை செய்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்

விமானப்படை விமானங்கள் 1999.09.15 அன்று நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்திருந்தனர்.

தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினுடைய ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

குறித்த அமைப்பினுடைய இணைப்பாளர் ச. ரூபனை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து குறித்த நிகழ்வினை செய்ய வேண்டாம் என பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link