Type to search

Headlines

விபரீத முடிவெடுத்த இளைஞன் மரணம்

Share

பணம் கொடுக்க தாய் மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் குப்பிழான் வடக்குப் பகுதியில் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு குறித்த இளைஞன் தாயிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார்.

எனினும், தாயார் பணம் கொடுக்க மறுத்த நிலையில் “நீ நாளைக்கு விடிய அழுவாய்” எனத் தாயாருக்கு விரக்தியுடன் தெரிவித்த குறித்த இளைஞன் வீட்டின் முன்பகுதித் தளத்தினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் குப்பிழான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மைய பகுதியில் வசித்து வந்த உமாபரன் சுகந்தன் (வயது-22) என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link