Type to search

Headlines

விக்னேஸ்வரனுக்கு பலமாக எப்போதும் இருப்பேன்

Share

எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முன்னாள் முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார்.

முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன்.

அவருக்கு பக்கபலமாக நான் எப் போதும் இருப்பேன் என வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் உட்பட பலர் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக் குப் பதிலளிக்கும் வகையில் வெளி யிட்டுள்ள முகப் புத்தகப் பதிவிலேயே டெனீஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

என்னுடைய நோக்கம் முன்னாள் முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதல்ல. எந்த தவறும் செய்யாமல் வீண்பழி சுமத்தியது பிழை யென்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே வழக்குத் தொடுத்தேன்.

அந்த நேரத்தில் எவரும் இதில் உள்ள நியாயப்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க முன்வர வில்லை. எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய நியாயப்பாடு ஒன்று மட்டுமே.
கடந்தவை கடந்த வையாகவே இருக்கட்டும். இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார்.

முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம் சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link