Type to search

Headlines

முகமாலையில் எலும்புக்கூடுகள் நேற்றும் மீட்பு

Share

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலைப் பகுதி யில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளி நொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வின்போது விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் மனித எச்சங் களினாலான மண்டையோடுகள், எலும்பு கள் போன்றன மீட்கப்பட்டதுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப் புலிகள் போராளிகள் அணிந்திருக்கும் சயனைட் குப்பி மற்றும் இலக்கத் தகடுகள் இரண்டு என்பன மீட்கப்பட்டதுடன் குறித்த அகழ்வு தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் இடம்பெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link