Type to search

Headlines

தேர்தல் நடத்துவதற்கான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளது

Share

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற இப்போது அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

அத்தோடு தற்போது தேர்தலை நடத்துவதற்கான சூழல் நாட்டில் இல்லை என்ற கருத்தை தான் நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link